
விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே
தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.
இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.
முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன்
பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.
பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான்
ஊர் திரும்பினான் முனியசாமி.
முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட
இவனுக்கு தெரியாது.
வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.
ஊருக்குள் முனியசாமிக்கு "அரைப்பைத்தியம்" என்று பெயர்.
எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற
முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.
முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.
-நிலாரசிகன்.
பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்....)
Wednesday, October 10, 2007
| [+/-] |
இடுகாடு... |
Monday, October 8, 2007
| [+/-] |
"14வது கதை" |
நகரத்தை விட்டு நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது
கிரைம் நாவல் எழுத்தாளர் பத்ரியின் வீடு.
வீடு என்பதை விட அதை பங்களா என்றே சொல்லலாம்.
சத்யா வரவேற்பறையில் காத்திருந்தாள். சத்யா எழுத்தாளர் பத்ரியின் தீவிர ரசிகை.
அந்த வீட்டின் நிசப்தம் சத்யாவிற்கு புதிதாக இருந்தது.
"வாங்க வாங்க" என்றவாறே வந்து அமர்ந்தார் பத்ரி.
"சார் வணக்கம், நான் சத்யா உங்களோட தீவிர ரசிகை..."
"ஓ தெரியுமே என் பி.ஏ சொன்னான், நீங்க வர்றதா"
"உங்களோட அடுத்த நாவல் "14வது கதை" பத்தி தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன் சார் "
"அது ஒரு சைக்கோவை பற்றியது. நகரத்தில் திடீரென்று இளம்பெண்கள் காணாமல் போகிறார்கள் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை பற்றியதுதான் 14வது கதை"
"தலைப்பே வித்தியாசமா இருக்கு சார்"
"அந்த சைக்கோ 13 பெண்களை கடத்தி கொன்றுவிடுகிறான், அவன் கடத்தப்போகும் 14வது பெண்ணை பற்றியதுதான் இந்தக்கதை"
"அந்த பெண் பெயர் என்ன சார்" ஆர்வமுடன் கேட்டாள் சத்யா.
"சத்யா" குரூரமாக சிரித்துக்கொண்டே கத்தியுடன் சத்யா நோக்கி முன்னேறினான் சைக்கோ பத்ரி.
மறுநாள் செய்தித்தாளில் சத்யாவின் புகைப்படம் பெரிதாக வந்திருந்தது.
"தொடர்கொலையாளி உயிருடன்பிடிபட்டான். பெண் ஐ.பி.எஸ் அதிகாரி சத்யாவிற்கு பிரதமர் பாராட்டு".
Thursday, September 27, 2007
| [+/-] |
காதல் ரோஜாவே |

புதுசாய் பூத்த மல்லிகைப்பூ போல் இருக்கிறாள். யாருக்குத்தான் அவளை பிடிக்காது...
அவள் சுடிதாரில் வந்தாலே தேவதை போல் இருப்பாள்.. நேற்று சேலையில் அவள் வந்த அழகை வர்ணிக்க அடடா தமிழில் வார்த்தைகளே இல்லையா!
பூக்களால் செய்த சிலையோ?...பட்டாம்பூச்சிகள் இருவிழியோ?
இவள் என்ன பச்சைக்கிளி ஜாதியா? இல்லை புள்ளிமான் இனமா?
ஒரு பார்வையிலே வீழ்த்திவிட்டாளே என்னை? அந்த கருவிழிக்குள் தொலைந்தே போனதே என் சிறு இதயம்?
வாழ்ந்தால் இவளோடு வாழவேண்டும்...இல்லை இவள் விழிக்குள் குதித்து புனிதமாக உயிர்விட வேண்டும்!
சரவணனின் மனதில் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தது..
இந்த நினைப்பிற்கு காரணம் கல்லூரியில் சரவணனுக்கு ஜூனியராக சேர்ந்திருக்கும் பூஜா.
ஐஸ்கீரிமில் செய்துவைத்த சிற்பம் போலிருப்பாள் பூஜா. யாருக்குத்தான் காதலிக்க தோன்றாது!
பூஜா கல்லூரியில் சேர்ந்து நான்கு நாட்களே ஆகிறது. அவளிடம் சென்று தன் மனதை திறந்தான் சரவணன்.
"பூஜா,ஒரு நிமிசம்"
ஐந்தரைஅடி பூ தலைதிருப்பி பார்த்தது.
"எனக்கு சுத்தி வளச்சு பேச தெரியாது,உன்னை பார்த்த உடனே எனக்கு புடிச்சிடுச்சி...உன் கூட வாழ்ந்தா என் வாழ்க்கை ரொம்ப அழகா,அற்புதமா இருக்கும்னு நினைக்கிறேன்...சீக்கிரம் ஒரு நல்ல பதிலை...அவன் முடிப்பதற்குள் வந்துவிட்டாள் அவள் தோழி ரீனா.
சட்டென்று அங்கிருந்து விலகி, "சே இந்த ஹிந்திக்காரி வந்து கெடுத்துட்டா" என்று அவள் தோழியை மனதிற்குள் திட்டிக்கொண்டே நடக்க ஆரம்பித்தான் சரவணன்.
"ரீனா நம்ம சீனியர் சரவணன் என்கிட்ட ஏதோ சொன்னார் ஒண்ணுமே புரியலடி" ஹிந்தியில் சிரித்துக்கொண்டே சொன்னாள் பூஜா ஷெராவத்.
Wednesday, September 26, 2007
| [+/-] |
சிகப்பு ரோஜா |

மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.
கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும்
மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.
வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.
எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.
"மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை
பத்தி எனக்குத் தெரியும் நீ உன் வேலைய பாருடின்னு சொல்லிட்டேன், பட்
இப்போ, இன்னைக்கு என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தப்பறம்தான் புரியுது
அவ சொன்னது உண்மைன்னு!"
"இதுவரைக்கும் தப்பான எண்ணத்தோட நீ என்கிட்ட ஒரு நாளும் வந்ததில்லையே வினோத்!
நீயா இப்படி?"
பொறிந்து தள்ளினாள் வித்யா.
"ரெட் லைட் ஏரியாவுக்குள்ள நீ போறத பஸ்ல இருந்து பார்த்தேன் ,கடவுளே அது நீ இல்லாம
வேற யாராவதா இருந்திருக்ககூடாதா?
பொறுமையாய் அவள் பேசுவதை எவ்வித சலனமுமின்றி கேட்டுக்கொண்டிருந்த வினோத்
பேச ஆரம்பித்தான்.
"என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்ளோதானா வித்யா? உன்மேல் என் உயிரையே வச்சிருக்கேன்
என் காதலை சந்தேகப்படுற உரிமை உனக்குக்கூட கிடையாது.
இன்னைக்கு காலைல எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு சின்னப் பையன் பிச்சை எடுத்துட்டு
இருந்தான்,விசாரிச்சப்போ அவனை யாரோ கடத்திட்டு வந்துட்டங்கங்கற உண்மை தெரிஞ்சுது.
அவன் அம்மா சிகப்பு விளக்கு பகுதியில பாலியல் தொழில்ல
ஈடுபடுறவங்கன்னும் தெரிஞ்சுது.
என் நண்பர்கள் சிலபேரும்,போலீஸும் சேர்ந்து அவனை மீட்டோம்.
அப்புறமா அவனை ரெட் லைட் ஏரியாவுல கொண்டு போய் விட்டுட்டு திரும்பி வரும்போதுதான் நீ பாத்திருக்கன்னு நினைக்கறேன்"
கடந்து செல்லும் ரயிலைப்போல தடதடவென்று பேசிவிட்டு
நடக்க ஆரம்பித்தான் வினோத்.
பெத்தவனால் நாலாயிரத்திற்கு விற்கப்பட்டு,பாலியல் தொழிலில்
பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டு,கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தவளை காப்பாற்றி, உடலை நேசிக்காமல் உள்ளம் மட்டும்
நேசித்தவன் கோபமாய் நடந்துசெல்வதை பரிதவிப்புடன்
பார்த்துக்கொண்டிருந்தாள் வித்யா.
Sunday, September 23, 2007
| [+/-] |
வானவில்லோ நீ? |

அன்புள்ள திவ்யா....
என்னுயிரின் ஒவ்வொரு துளியிலும் நிறைந்திருப்பவளே..ஏனடி என்னைப் பிரிந்தாய்?
உனக்கென்று காத்திருக்கும் நிமிடங்களிலெல்லாம் மேகக்கூட்டமெல்லாம்
மல்லிகைபூக்களாக மாறும் அழகினை ரசித்திருக்கிறேன்.
அந்த காத்திருப்பின் ரம்மிய நிமிடங்களை இனி என்று பெறுவேன் கண்ணே!
காதல் மொழியை ஒரே பார்வையில் மொத்தமாய் சத்தமின்றி எனக்கு கற்றுத்தந்ததே உன் கண்கள்.... அந்தக் கண்களை இனி என்று பார்ப்பேன் கண்ணே!
பிள்ளை மனம்கொண்டவள் நீ....என்னை பிரிந்துவிட்டு மெளனமாய் இருக்க
உன்னால் எப்படி முடிகிறது திவ்யா?
உன் பிரிவைக்கூட தாங்கி இருப்பேன் கண்ணே....அழாமல் நீ
பிரிந்திருந்தால்...
காலத்திற்கு நம் காதல் புரியவில்லை... காதலுக்கும் நம் அருமை தெரியவில்லல. நம்மை பிரித்து வேடிக்கை பார்க்கிறது.
உன்னோடு வாழமுடியாத என்னால் உன் நினைவுகளோடு வாழ
முடிகிறேதே....
பிரிந்த நாளில் நீ தந்த வார்த்தைகள் மட்டுமே
இன்று என் வாழ்க்கையின் கனத்தை மடிதாங்குகின்றன.
காதலியுடன் வாழாமல் காதலுடன் வாழ்கின்ற
உன் ப்ரியமானவன்.
எழுதிய கடிதத்தை மீண்டுமொரு முறை படித்துவிட்டு அதனுடன் ரோஜாப்பூவொன்றை சேர்த்து கீழ்வைத்தேன்
நீர்வழிகின்ற என் கண்களை வியப்புடன் பார்க்கும் என் மகளைக்
கூட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்
கல்லறைத்தோட்டத்தைவிட்டு.
Thursday, September 20, 2007
| [+/-] |
ஊனம் |
ரமேஷின் வீட்டிற்குள் நுழைய தயக்கம் கலந்த பயம் என்னை
முதல்முறையாய் ஆட்கொண்டது.
ரமேஷ் என் பக்கத்துவீட்டு பையன்.ஏழாம் வகுப்பு மாணவன்.
எப்பொழுதும் துறுதுறுவென்று இருப்பவன்.
"அண்ணா அண்ணா" என்று என்னிடம் பாசம்பொழியும் நல்லிதயம் கொண்டவன்.
அவனுக்கு இது நிகழ்ந்திருக்ககூடாது. பேருந்து விபத்தில் இடதுகை
நொறுங்கி கூழாகிப்போனது.
அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிட்டனர் ரமேஷின் இடதுகையை.
நேற்றுதான் மருத்துவமனைவிட்டு வீடு வந்திருக்கிறான் .
"ரமேஷ்....அண்ணா வந்திருக்கார் பாருடா" அரைத்தூக்கத்திலிருந்தவனை
மெதுவாய் எழுப்பினார் அவன் அம்மா .
"அண்ணா இனி என்னால மத்த பசங்க மாதிரி விளையாட முடியாதாண்ணா?"
என்னைக்கண்டவுடன் கண்ணில் நீர்மல்க கேட்டான் ரமேஷ.
"உனக்கு ஒண்ணுமில்லடா நீ முன்ன மாதிரியே விளையாடலாம், உன் பிரண்ட்ஸ்கூட வெளியே போகலாம்,எல்லாம் பண்ணலாம்டா"
நான் சொன்னதைகேட்காமல் அழத்துவங்கிவிட்டான் ரமேஷ்.
என் ஆறுதல்வார்த்தைகளால் அவனை சமாதானப்படுத்த இயலவில்லை
ஊனம்தந்தவலியை அவன் கண்களில் உணர்ந்தவனாய்
வீடுநோக்கி திருப்பினேன் என் சக்கரநாற்காலியை.
| [+/-] |
தில்லி To ஆக்ரா |
"என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?" ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.
"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "
"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"
என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.
தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்
"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.
தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது
"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.
வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்