Wednesday, October 10, 2007

இடுகாடு...



விபத்தில் இறந்து உடல்சிதைந்துபோனதால் உடனே
தகனம் பண்ணிவிட்டார்கள் முனியசாமியின் மனைவியை.

இரண்டுமணி நேரமாக எரிகின்ற சிதையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான் முனியசாமி.

முதலில் அவன் காதுக்கு இந்தச் செய்தியை சொன்னவன்
பெட்டிக்கடை வைத்திருக்கும் பால்பாண்டி.

பக்கத்து ஊர் திருவிழாவிற்கு சென்றுவிட்டு இன்றுதான்
ஊர் திரும்பினான் முனியசாமி.

முனியசாமி வீட்டிற்கு போய் பலமாதங்கள் ஆகிவிட்டது.மனைவி கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய்விட்டாள். இருமகன்கள்,அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூட
இவனுக்கு தெரியாது.

வாயில் எப்பொழுதும் புகைந்துகொண்டிருக்கும் கருநிற சுருட்டு.

ஊருக்குள் முனியசாமிக்கு "அரைப்பைத்தியம்" என்று பெயர்.

எரிகின்ற சிதைமுன் நின்று மெளனமாய் அழுகின்ற
முனியசாமியை வியப்புடன் பார்த்தது காகம் ஒன்று.

முனியசாமி இடுகாட்டில் பிணம் எரிப்பவன்.

-நிலாரசிகன்.

பின்குறிப்பு : (இக்கதையை கீழிருந்து மேலாகவும் படிக்கலாம்....)

11 Comments:

காஞ்சனை said...

நல்லாருக்கு. எப்போதும் போல் கடைசி வரியில் பஞ்ச்.

- சகாரா.

Unknown said...

amazing.. read frm the bottom to top also.. nalla irukku... vaalthukkal.. keep it up

யோசிப்பவர் said...

Did anybody noticed the picture in this story as upside down?

நிலாரசிகன் said...

//Did anybody noticed the picture in this story as upside down?

யாரும் கவனித்ததாக தெரியவில்லை யோசிப்பவரே.

உங்களது கூர்மை கண்டு வியக்கிறேன்.

Putholi said...

Arumaiyaai
Kathai
Irundhadhu

kavidhai Piriyan said...

Romba Nalla irukku ..:-)Keezhrundhu melaga

ஜே கே | J K said...

கீழிருந்து மேல், மேலிருந்து கீழ் எப்படி படிச்சாலும் கடைசில பஞ்ச் வருது. சூப்பர்.

ஜே கே | J K said...

படமும் எப்படி பார்த்தாலும் சூப்பர்.

பூமகள் said...

வாவ்...!
நல்ல எழுத்து வன்மை..!
கீழிருந்து மேல்..! மேலிருந்து கீழ்..!
பாலிண்ட்ரோம் கதையா??!!!

பாராட்டுகள் நிலாரசிகரே..!!

கலக்கல் கதைகள்..!

Anonymous said...

அருமை நண்பா!!!

Anonymous said...

Arumai Nilarasigaree