"என்னங்க எனக்கொரு சந்தேகம்" தடதடக்கும் ரயிலில் ஜன்னல் வழியே இயற்கை ரசிக்கும்
தன் கணவனிடம் மெதுவான குரலில் கேட்டாள் செண்பகம்.
முகத்தில் கேள்விக்குறியுடன் திரும்பி "என்ன?" என்றார் ராதாகிருஷ்ணன்.
"நம்மள வழி அனுப்ப வந்த இரண்டு பசங்களுக்கும் நீங்க பணம் கொடுத்தீங்க இல்ல"
"ஆமா அதுக்கென்ன?"
"மூத்த பையன் வேலையில சேர்ந்து இரண்டு மாசமாச்சு அவனுக்கு 500 ரூபா கொடுத்தீங்க, ஆனா
வேலை தேடிகிட்டு இருக்கற நம்ம சின்னவனுக்கு 100 ரூபாதான் கொடுத்தீங்க, எனக்கு புரியலங்க ஏன் அப்படி செஞ்சீங்க?" தன் சந்தேகத்தை கேட்டாள் செண்பகம்.
"செண்பகம், மூத்தவன் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாசமாச்சுல்ல அவனுக்கு பணத்தோட அருமை புரிஞ்சிருக்கும். 500 ரூபா கொடுத்தாலும் அளவாதான் செலவு செய்வான்.ஆனா இளையவனுக்கு இது முக்கியமான பருவம். வேலை தேடும்போது அதிகமா பணம் கொடுத்தா,அப்பாதான் பணம் தர இருக்காரேங்கற எண்ணம் வந்துடும். அதுக்குதான் அவனுக்கு கம்மியா கொடுத்தேன்" தீர்க்கமான குரலில் சொல்லும் தன் கணவனை கண்டு வியந்தாள் செண்பகம்.
Friday, March 21, 2008
| [+/-] |
ஊர்க்காசு (ஒரு பக்க கதை) |
Tuesday, March 18, 2008
| [+/-] |
பைத்தியங்கள் (ஒரு பக்க கதை) |
இரவு பதினோரு மணி. கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்து விட்டது.
இதை முதலில் காலனியில் உள்ள எல்லோருக்கும் சொன்னது கந்தபழனி.
காலனியில் இச்செய்தி தீ போல் பரவி,கிணற்றை சுற்றி கூட்டம் கூடியது.
கிணற்றில் எந்த சத்தமும் கேட்கவில்லை. கிணற்று நீரில் எவ்வித அசைவும்
இல்லை.
தாய்மார்கள் தங்களது குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள்.
கிணற்றில் விழுந்த குழந்தை இறந்திருக்கும் என்றார் ஒருவர்.
இறந்துவிட்டால் பிணம்மிதக்குமே என்றார் மற்றொருவர்.
குழந்தை விழுந்ததை நீ பார்த்தாயா என்று கந்தபழனியை அதட்டினார்
ஒருவர்.
ஆம் என்பதுபோல தலையாட்டினான் கந்தபழனி.
அப்போ குழந்தை எங்கே என்று கேட்டார் மற்றொருவர்.
வானம் பார்த்து கைகாட்டினான் கந்தபழனி.
கந்தபழனியை கண்டு சிரித்தது நிலாக்குழந்தை.
சத்தமிட்டு சிரிக்கத்துவங்கினான் கந்தபழனி.
பைத்தியம் பேச்சைக்கேட்டு பைத்தியமானோமே என்று
நொந்தவாறு வீடு திரும்பினர் மற்ற பைத்தியங்கள்.
Friday, February 29, 2008
| [+/-] |
ஒரு நாள் பின்னிரவில்... |
முன்பாடல் சுருக்கம்:
காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்
சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ
என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையானாய் நீ
உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை
சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை
வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?
வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...
கனவில் கூட நீ என்னை பிரிவதேன்?
கவிதையில் கண்ணீராய நான் கரைவதேன்?
ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..
Tuesday, February 26, 2008
| [+/-] |
முத்தே முத்தம்மா.... |
"சொன்னா புரிஞ்சுக்கடா" கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி.
"முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்..."
"நீ மட்டும் அவளுக்கு முத்தம் கொடுத்து பாரு அப்புறம் உன்ன பார்க்க வரவே மாட்டா"
"சே சே அவளுக்கு எம்மேல ஆசை அதிகம்...என்னை காதலிக்கிறது அவ கண்ணுலயே தெரியுதுடா"
"ஒரு பொண்ணு நம்மள பார்த்துட்டா உடனே அவ நம்மள காதலிக்கறான்னு நினைக்கறது தப்புடா" அறிவுரை செய்ய ஆரம்பித்தான் ஜாக்கி.
"நிறுத்துடா, என் செல்லம் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல மச்சி, என் மேல உயிரையே வச்சிருக்கா"
"சரி இனி உன்னை திருத்த முடியாது, என்ன வேணாலும் செய்" கோபமாக திட்டிவிட்டு எழுந்துபோய் விட்டான் ஜாக்கி.
என் காதலிக்கு நான் முத்தம் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் இவனுக்கு என்ன? ஒருவேளை இவனுக்கும் அவ மேல ஏதாவது.... சே சே அப்படியெல்லாம் இருக்காது..சரி நாளைக்கு காதலர்தினம், நாளைக்கு முத்தம் கொடுத்தா வாழ்க்கை முழுசும் மறக்கவே மாட்டா என் பியூட்டி.... நினைத்தவாறே உறங்கிவிட்டேன்.
பிப்ரவரி 14, நேரம் காலை 9 மணி.
அதோ வருகிறாள் என் தேவதை...
என்ன கொடுமை இது! யாரோ ஒருவனுடன் வருகிறாளே!.....என்னைக் காண்பித்து ஏதோ சொல்கிறாளே?...இருவரும்
சிரித்துக் கொள்கிறார்களே...என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லையே
கூண்டுக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.
மனிதக்குரங்காக பிறந்தால் இப்படித்தான். மனிதர்களின் மொழி புரிவதில்லை.
Thursday, February 7, 2008
| [+/-] |
ஒரு துளி விஷம் போதுமடி! |
இனியும் பொறுக்க முடியாது. என்னை மன்னித்துவிடு சந்தியா.
இனியும் உன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்க முடியாது.
என் சூழ்நிலை தெரிந்தும் ஏன் உன்னால் எனக்காக இறங்கி வர முடியவில்லை?
இத்தனை நாட்கள் உனக்காக விட்டு வைத்த உயிர் இன்று பிரிய போகிறது.
நீ அழுவாய் என்று தெரியும். நீ துடிதுடிப்பாய் என்றும் தெரியும்.
ஆனால் என்னால் முடியாது. முடியவே முடியாது சந்தியா.
இதோ என் கைகளில் இருக்கிறது விஷ பாட்டில்.
விஷத்தின் கசப்பு தெரியாமலிருக்க நேற்று நீ செய்த இனிப்புடன் கலக்கிறேன்.
விஷம் கலந்த இனிப்பை படுக்கை அறையின் கட்டிலுக்கடியில் வைத்துவிட்டேன்.
இன்றுடன் முடிந்தது அந்த சுண்டெலியின் கதை.
இத்துடன் முடிந்தது இக்கதை!